கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் பறிமுதல்

கோவை அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.

கோவை, ஜனவரி 22

கோவை அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.

கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தினமும் அதிகமான வாகனங்கள் வருவதால் இம்மருத்துவமனையில் பார்க்கிங் பிரச்சனை இருந்து வருகிறது.

இந்த சூழலில், ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் ரயில் மூலம் வெளியூர் செல்பவர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் வாகனங்களை நிறுத்திச் செல்வதாக புகார் எழுந்தது.

இதனிடையே, மருத்துவமனையில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை கணக்கெடுக்கும் பணியை அம்மருத்துவமனை ஊழியர்கள் இன்று காலை தொடங்கினர். அப்போது புற்றுநோய் வார்டின் முன்புறமும், மருத்துவமனையின் கேண்டீன் முன்புறமும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இரண்டு கார்கள் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்திரவேல், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவமனைக்கு வந்த போலீசார் கேட்பாரற்று இருந்த இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...