பேருந்து கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் மாதர் சங்கத்தினர்

பேருந்து கட்டணம் உயர்வு குறித்து கோவையில் பொதுமக்களிடம் நேரடியாக வாக்கு சேகரிக்கும் நூதன போராட்டத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, ஜனவரி 22

பேருந்து கட்டணம் உயர்வு குறித்து கோவையில் பொதுமக்களிடம் நேரடியாக வாக்கு சேகரிக்கும் நூதன போராட்டத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசு சமீபத்தில் உயர்த்தியுள்ள பேருந்து கட்டணத்திற்குத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்களின் அதிருப்தியை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வாக்கு சேகரிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்து கட்டண உயர்வு நியாயம், அநியாயம் என்ற வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு, அதற்கான வாக்கு சீட்டுகளை அங்கு வரும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். இதில், அனைத்து பொதுமக்களும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது அநியாயம் என அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

மேலும், பேருந்து நிலையத்தில் இருந்த மக்கள் கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினர். இந்த வாக்குகளைப் பெற்று அதனை தமிழக அரசுக்கு அனுப்ப உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் இதுபோன்று பொதுமக்களிடம் வாக்குகளைப் பெற உள்ளதாகவும் மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...