பேருந்து கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல்

அரசுப் பேருந்துகளின் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 22

அரசுப் பேருந்துகளின் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

அண்மையில் தமிழக அரசு பேருந்துகளின் பயணக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சிகளும் போராட்டங்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழக அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸின் மனுவை வழக்காக தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

அவரது மனுவில், தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ள பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். கட்டண உயர்வுக்கு மற்ற மாநிலங்களைக் காரணமாக சொல்லாமல் தமிழக மக்களுக்கு இதில் என்ன நன்மை என்பதை பார்க்க வேண்டும் என்று மக்கள் கொந்தளிக்கின்றனர். எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதி சுப்பையா, மனுவை வழக்காக தாக்கல் செய்தால் தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும் என்று கூறியுள்ளார்.

மாணவர்கள் போராட்டம்:

பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, இன்று தஞ்சை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...