பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைப்பு

அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.


கோவை, ஜனவரி 22

அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.



அண்மையில் தமிழக அரசு பேருந்து கட்டணங்களை உயர்த்தியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சாய் கணேஷ் என்பவர் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து, தனது வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார். சென்னையைச் சேர்ந்த சாய் கணேஷ் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், பேருந்து கட்டண உயர்வு பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தனது வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பதாக அவர் கூறினார். 

சாய் கணேஷின் இந்தச் செயலுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ஒரு சிலர் பேசியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...