சகோதரி நிவேதிதையின் 150-வது பிறந்தநாளையொட்டி ரதயாத்திரை கோவையில் தொடக்கம்

சகோதரி நிவேதிதை 150வது பிறந்தநாளையொட்டி ரதயாத்திரையை மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

கோவை, ஜனவரி 22

சகோதரி நிவேதிதை 150வது பிறந்தநாளையொட்டி ரதயாத்திரையை மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 



கோவை தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தத் துவக்க விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் விவேக் மற்றும் கல்வியாளர்கள் ஆன்மீக மையங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இன்று துவங்கிய ரதயாத்திரை பல்வேறு மாவட்டங்களின் வழியாக சென்று வரும் பிப்ரவரி 22-தேதி சென்னையில் நிறைவடைகின்றது. இந்த ரதயாத்திரையானது 30 நாட்கள், தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் 3,000 கி.மீ பயணம் செய்து 2 லட்சம் மாணவிகளை சந்திக்கின்றது. 



ரதயாத்திரை துவக்க விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசுகையில், நான் பேசுவதற்காக நிவேதிதை பற்றிய புத்தகத்தை படிச்சிட்டு வந்ததை, தனக்கு முன்னாடி அனைவரும் பேசிவிட்டனர். கரும்பு சக்கை மாதிரி பேசுவதற்கு ஒன்றுமில்லாமல் உங்கள் முன்னாள் நிற்கின்றேன். சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையாக இருந்த மார்கெரட் நோபல்தான் சகோதரி நிவேதிதை. வாட்ஸ் ஆப்-பில் இப்போது வரும் சிஷ்யைகளை பத்தி படங்கள் வருகின்றது. அந்த சிஷ்யைகளை பற்றி நான் பேசலை. புரிஞ்சா புரிஞ்சுக்கங்க. சுவாமி விவேகானந்தர் - சகோதரி நிவேதிதா இடையேயான உறவு தந்தை மகள் உறவைப் போன்றது. பெண்களுக்கு வீர உணர்வை ஊட்டு என விவேகானந்தர் நிவேதிதையிடம் தெரிவித்தார். விவேகானந்தரின் போர்வாளாக இருந்தவர் நிவேதிதை. 



எனக்கு தேவையான அனைத்து கருத்துகளும் சனாதான தர்மத்தில் கிடைத்தது. நான் ஏன் மற்றவர்களைப் படிக்க வேண்டும் என நினைத்திருந்த நிலையில், சகோதரி நிவேதிதை குறித்து படிக்கும் வாய்ப்பினை வானதி சீனிவாசன் ஏற்படுத்திக் கொடுத்தார். அனைத்துக் கூட்டங்களிலும் இனி விவேகானந்தர், நிவேதிதா குறித்து பேசுவேன். செல்போனும், கேமராவும், இணையமும் வராமல் இருந்திருந்தால் பாலியல் பலாத்காரங்கள் நடக்கவே நடக்காது. இவ்வாறு நடிகர் விவேக் தெரிவித்தார்.



 

இதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசுகையில், காவி நிறம் என்பது இந்துக்களின் அடையாளம் என முன்னிறுத்தப்படுகின்றது. ஆனால், காவி என்பது இந்துக்களின் நிறம் அல்ல. காவி என்பது பாரததேசத்தின் நிறம். காவி நிறத்தை வைத்து சகோதரி நிவேதிதா முதன்முதலில் தேசிய கொடியை வடிவமைத்தார். நாட்டின் தேசியகீதமாக இருக்க வேண்டியது ”வந்தே மாதிரம் பாடல்” என்பதையும் வலியுறுத்தியவர் சகோதரி நிவேதிதை. 



மேலும். ஒவ்வொரு இந்தியனின் புனிதநூல் இந்திய அரசியலமைப்பு சட்டம் என மோடி அனைத்து கூட்டங்களிலும் தெரிவித்து வருகின்றார். சிவன் சொத்து குலநாசம் என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிகளும் புரிந்து கொண்டால், இந்திய நாட்டிற்கு கேடு என்பதே கிடையாது. மாணவிகள் அனைவரும் நிவேதிதைகளாக தோன்ற வேண்டும். என்றார். 



நிகழ்ச்சியின் முடிவில் நிவேதிதை மற்றும் விவேகானந்தர் உருவசிலைகளுடன் கூடிய ரத யாத்திரையை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மலர் தூவி துவங்கி வைத்தார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...