கோவை மாநகர காவல்துறையை பெருமைப்படுத்திய பெண் காவலர் : பாராட்டி பரிசு வழங்கிய நீதித்துறை

காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளை விரைந்து முடித்த பெண் காவலரை பாராட்டிய நீதிபதி அவருக்கு பரிசு வழங்கி கவுரவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 22

காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளை விரைந்து முடித்த பெண்  காவலரை பாராட்டிய நீதிபதி அவருக்கு பரிசு  வழங்கி கவுரவித்துள்ளார்.

காவல்துறையை பெருமைப்படுத்தும் விதமாக பல காவலர்கள் கோவை மாநகரில் பணியாற்றி வருகின்றனர். 

தன்னலமின்றியும், கடமையை சிறப்பாக செயல்படுத்தியும், சமூக தொண்டாற்றியும் காவல்துறையை கவுரவிப்பவர்கள் கோவை மாவட்டத்தில் ஏராளம். 

அந்த வகையில், நீதிபதியால் பாராட்டப்பட்டு மேலும் ஒரு பெருமையை மாநகர காவல் துறைக்கு சேர்த்திருக்கிறார் பெண் காவலர் ஸ்வப்ன சுஜா. 

சிங்காநல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். 

இடமாறுதலின் பேரில் ஓராண்டுக்கு முன் சிங்காநல்லூர் காவல் நிலையம் வந்த அவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளை விரைந்து முடிக்க வழிவகை செய்துள்ளார். 

2012-ம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருந்த பழைய வழக்குகளில் 85 வழக்குகளுக்கான சாட்சிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று அவ்வழக்குகளை முழுமையாக முடித்து வைத்திருக்கிறார். 

இந்த நிலையில்,  மூன்றாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி V.P.வேலுசாமி மற்றும்  காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட வழக்குகள் தொடர்பான கூட்டம் 

இன்று நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. 

 

இந்த கூட்டத்தில், வழக்குகளை விரைந்து முடிக்க உதவிய பெண் காவலரை பாராட்டிய நீதிபதி அவருக்கு வெகுமதியாக பரிசினை வழங்கி கவுரவித்துள்ளார். 

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு அந்தத்துறை  அதிகாரிகள் பாராட்டுக்களையும், பரிசுகளையும் வழங்கக் கேட்டிருப்போம். 

ஆனால், நீதிபதி ஒருவர்  பெண் காவலரை கவுரவித்த நிகழ்வு ஒட்டுமொத்த போலீசாரையும் நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது. 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...