ராஜீவ்காந்தி கொலை வழக்கு: குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து பதிலளிக்க 6 வாரம் கெடு

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதம் மீது 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

ஜனவரி 23

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதம் மீது 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட 7 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அவர்களை விடுதலை செய்ய முடிவெடுத்து மத்திய அரசின் கருத்தை கேட்டு 2016 ஆம் ஆண்டு இரண்டாம் கடிதம் எழுதியிருந்தது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த விசாரணையில் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தது. இதனிடையே, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் தங்களை விடுவிக்குமாறு, தண்டனைப் பெற்றுள்ள 7 பேரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கின் இறுதி விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிப்பது குறித்து 6 வாரத்தில் முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், இவர்களை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...