9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

கோவையில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, ஜனவரி 23

கோவையில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சூலூர் அடுத்த சென்னசிட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி(36). குடும்பப் பிரச்சனை காரணமாக வெள்ளியங்கிரி தனது மனைவி மற்றும் மகளைப் பிரிந்திருந்த நிலையில் வாழ்ந்து வந்தார். தனது மகளுடன் பயிலும் சக மாணவி (9) பேசினால் குடும்பப் பிரச்சனை தீர்ந்துவிடும் எனக் கூறி மகளின் தோழியை வெள்ளியங்கிரி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அந்த சிறுமிக்கு வெள்ளிங்கிரி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 

இது தொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2015-ல் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ பிரிவின்கீழ் வெள்ளியங்கிரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 9 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...