வார்டுகளின் எல்லை மறுவரையறைப் பட்டியல் பற்றிய ஆட்சேபணை மனுக்கள் மீதான ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள வார்டுகளின் எல்லை மறுவரையறைப் பட்டியல் பற்றி கருத்துக்கள் அல்லது ஆட்சேபணை மனுக்களின் மீது ஆலோசனை நடத்துவதற்காக வரும் 31-ம் தேதி மண்டல அளவிலான கூட்டம் நடக்கிறது.

கோவை, ஜனவரி 23

கோவை மாவட்டத்தில் உள்ள வார்டுகளின் எல்லை மறுவரையறைப் பட்டியல் பற்றி கருத்துக்கள் அல்லது ஆட்சேபணை மனுக்களின் மீது ஆலோசனை நடத்துவதற்காக வரும் 31-ம் தேதி மண்டல அளவிலான கூட்டம் நடக்கிறது. 

தமிழ்நாடு மாநில எல்லை மறுவரையறை ஆணையத்தின் உத்தரவுப்படி கோவை மாவட்டத்தில் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டுகளை எல்லை மறுவரையறை செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக எல்லை மறுவரையறைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இருந்து கருத்துக்கள் அல்லது மறுவரையறை பட்டியல் வெளியிடப்பட்டது.

இம்மனுக்கள் மீது எல்லை மறுவரையறை ஆணையத்தால் வரும் 31-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மண்டல அளவிலான கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எல்லை மறுவரையறை தொடர்பாக கருத்துக்கள் அல்லது ஆட்சேபணைகள் தெரிவித்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...