வால்பாறையில் கழுதையை கடித்துக் கொன்ற சிறுத்தைப்புலி : பொதுமக்கள் பீதி

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கழுதையை சிறுத்தைப்புலி தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, ஜனவரி 23

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கழுதையை சிறுத்தைப்புலி தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 



வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சிறுத்தைப்புலிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழையும் சிறுத்தை ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளைத் தாக்கி கொன்று விடுகிறது. இந்நிலையில் இன்று காலை வால்பாறை பழைய பேருந்துநிலையம் அருகாமையில் சிறுத்தைப்புலி ஒன்று கழுதையை தாக்கிக் கொன்றது. மக்கள் நடமாடும் பகுதியில் சிறுத்தைப்புலி நுழைந்து கழுதையை கொன்றது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறை அதிகாரி கோபாலகிருஷ்ணன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அங்கு சென்று இறந்த கழுதையை கைப்பற்றினர். வனத்துறையினர் கழுதை இறந்தது குறித்து வாகனம் மோதி இறந்ததா அல்லது சிறுத்தைப்புலி தாக்கி இறந்ததா என இரு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதனிடையே, இன்று மாலை வால்பாறை அரசு கால்நடை மருத்துவர் பொன்பாரிவேந்தன் இறந்த கழுதையை உடற்கூறு ஆய்வு செய்தார். அப்போது, கழுதையின் கழுத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம், கழுதையை சிறுத்தைப்புலி தாக்கிக் கொன்றதை வால்பாறை அரசு கால்நடை மருத்துவர் பொன்பாரிவேந்தன் உறுதி செய்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...