மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3-வது வழக்கிலும் லாலு குற்றவாளி என அறிவிப்பு

மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3-வது வழக்கிலும் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

ஜனவரி 24

மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3-வது வழக்கிலும் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பீகார் முதலமைச்சராக இருந்த போது 1992-93-ம் ஆண்டுகளில் ரூ.33.67 கோடி அளவிற்கு மாட்டு தீவனம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 76 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 14 பேர் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே மரணமடைந்து விட்டனர். 3 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். 2 பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். மீதமுள்ள 56 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.

மாட்டு தீவன ஊழல் தொடர்பாக லாலு மீது 6 வழக்குகள் போடப்பட்டன. இதில், ஏற்கனவே 2 வழக்கில் லாலு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு, ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நீதிபதி எஸ்.எஸ்.பிரசாத் தலைமையிலான அமர்வு இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

தண்டனை விவரம் பிற்பகல் 2 மணியளவில் அறிவிக்கப்பட உள்ளது. மாட்டு தீவன ஊழல் விவகாரத்தில் லாலுவிற்கு எதிரான முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2வது வழக்கில் மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 3வது வழக்கிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...