பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் சாலைமறியல் : போலீஸார், மாணவர்களிடையே தள்ளுமுள்ளு

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களை, போலீஸார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்த முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கோவை, ஜனவரி 24

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களை, போலீஸார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்த முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இரண்டாவது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அப்போது, கல்லூரி முன்பாக மாணவர்கள் சாலையில் படுத்து, மறியலில் ஈடுபட்டனர்.



இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனை ஏற்க மறுத்து மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால், மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். மேலும், மாணவர்களை குண்டு கட்டாகத் தூக்கி சென்று கைது செய்ததால், இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ள பேருந்து கட்டண உயர்வைத் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடருமென கூறிய மாணவர்கள், ஜக்டோ - ஜியோ போராட்டத்தின் போது ஆசிரியர்கள் போராட்டத்தை மாணவர்கள் ஆதரித்தாகவும், ஆனால், மாணவர்கள் போராட்டத்தை ஆசிரியர்கள் ஆதரிக்க மறுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...