கே.ஜி.குழுமத்தின் நான்காவது அடுக்குமாடி குடியிருப்பு திட்ட முன்பதிவு குடியரசு தினத்தில் துவக்கம்

கே.ஜி.குழுமத்தின் டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் நான்காவது அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் காளப்பட்டி அருகே நேரு நகரில் துவங்கியுள்ளது. இதற்கான முன்பதிவு குடியரசுத் தினமான வரும் 26-ம் தேதியன்று துவங்க உள்ளது.

கோவை, ஜனவரி 24

கே.ஜி.குழுமத்தின் டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் நான்காவது அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் காளப்பட்டி அருகே நேரு நகரில் துவங்கியுள்ளது. இதற்கான முன்பதிவு குடியரசுத் தினமான வரும் 26-ம்  தேதியன்று துவங்க உள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் கிருத்திகா விக்ரம், சஞ்சய் விஜயகுமார் மற்றும் கண்ணையன் ஆகியோர் இத்திட்டம் குறித்து கூறியதாவது:-

கே.ஜி.குழுமம் 2012-ம் ஆண்டு முதல் கட்டுமான துறையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது நான்காவது அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் காளப்பட்டி அடுத்த நேரு நகரில் 136 ஏக்கர் பரப்பளவில் 136 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதில், 400 சதுர அடியில் ஒரு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 15 லட்சம் முதல் துவங்குகிறது. 700 சதுர அடியில் இரண்டு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 25 லட்சத்திற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தரமான பொருட்கள் கொண்டு கட்டப்படும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்து வசதிகளும் கொண்டதாக இருக்கும். இதற்கான முன்பதிவு அரசு கலைக் கல்லூரி எதிரில் உள்ள கே.ஜி.ஹவுஸில் வரும் 26-ம் தேதி குடியரசுத் தினத்தன்று காலை 8 மணியளவில் துவங்கி 28-ம் தேதி வரை நடைபெறும்.

இந்தத் திட்டத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு 50,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அளிக்கப்படும். பிரதமரின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் மானியத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...