செல்பி மோகத்தால் உயிரை பணையம் வைத்த இளைஞர் : அதிர்ச்சி வீடியோ

சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுவதற்காகவும், அதிக லைக்குகள் கிடைக்க வேண்டும் என்ற மோகத்தில் இளைஞர்கள் பலர் அபாயகரமான வகையில் செல்பி எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை பேஷனாக வைத்துள்ளனர்.

ஜனவரி 24

சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுவதற்காகவும், அதிக லைக்குகள் கிடைக்க வேண்டும் என்ற மோகத்தில் இளைஞர்கள் பலர் அபாயகரமான வகையில் செல்பி எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை பேஷனாக வைத்துள்ளனர். 



ரயில் தண்டவாளத்தில் ஓடும் ரயில் முன் நின்று செல்பி எடுத்துக் கொள்வதற்காக பலர் காயமடைந்தும், உயிரை விட்டும் உள்ள சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளது. இந்நிலையில், ஐதராபாத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலுக்கு மிக அருகில் நின்று செல்பி எடுத்துள்ளார். இதில் ரயில் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த இளைஞர் வெளியிட்ட செல்பி வீடியோ வைரலானதை அடுத்து அவர் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோன்று காஷ்மீரிலும் இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு இருப்பது போன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தண்டவாளத்தின் நடுவே அவர் படுத்திருப்பதும், அவரின் மீது ரயில் வேகமாகக் கடந்து செல்வதாகவும் அந்த வீடியோ உள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக நண்பர்களிடம் சொல்லி இதுபோன்ற அபாயகரமான வீடியோவை அந்த இளைஞர் எடுக்கச் சொல்லி இருப்பது தெரிய வந்துள்ளது. 

இது போன்ற முட்டாள் தனமான செயல்களுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...