கோவையில் ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பலி : மற்றொருவர் படுகாயம்

கோவையில் வேகமாக வந்த ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


கோவை, ஜனவரி 24 

கோவையில் வேகமாக வந்த ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரது மகன் சுதீஷ் குமார் (20). இவர், அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி முடிந்ததும் அப்பகுதியில் இருந்த ரயில் தண்டவாளத்தில் சுதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர் சதீஸ் என்பவரும் நடந்து சென்றனர். அப்போது, இருவரும் ரயில் வரும் போது செல்பி எடுக்க முயன்றனர். 

அப்போது, பெங்களூரில் இருந்து வந்த சரக்கு ரயில் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் ரயில் நிலைய காவலர்கள், இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சுதீஸ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சதீஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...