தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்த விஜயேந்திர சரஸ்வதி, எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்- கொளத்தூர் மணி

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத விஜயேந்திர சரஸ்வதி மற்றும் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ஆகியோர் திருவள்ளுவர் சிலை முன்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.


கோவை, ஜனவரி 24

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத விஜயேந்திர சரஸ்வதி மற்றும் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ஆகியோர் திருவள்ளுவர் சிலை முன்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், சூலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்ற தமிழ் சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நிற்காத சம்பவம் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மரியாதை செலுத்தும் தமிழக மக்கள் மனதைப் பாதித்துள்ளது.

விஜயேந்திர சரஸ்வதி மற்றும் அந்நிகழ்ச்சியை நடத்திய பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ஆகிய இருவரும் தமிழையும், தமிழர்களையும் அவமதித்ததற்காகத் திருவள்ளுவர் சிலை முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும்.

பொது நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திர சரஸ்வதி தியானம் செய்ததாக விளக்கம் அளித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...