பேருந்து பயண சீட்டு உயர்வு: மக்களின் வேதனையை வெளிப்படுத்தும் உருவ பொம்மை உருவாக்கிய தங்க நகை தொழிலாளி

பேருந்து பயணச் சீட்டு உயர்வால் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் வேதனையை வெளிப்படுத்தும் வகையில் கோவையைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளி உருவாக்கிய உருவ பொம்மை வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவை, ஜனவரி 25

பேருந்து பயணச் சீட்டு உயர்வால் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் வேதனையை வெளிப்படுத்தும் வகையில் கோவையைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளி உருவாக்கிய உருவ பொம்மை வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி. ராஜா அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் காளைகளை வடிவமைத்திருந்தார்.

சிறிய அளவிலான உலக கோப்பை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர். உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் என பலவகைகளில் உருவச்சிலைகளை வடிவமைத்து வருகிறார்.

தற்போது, தமிழக அரசு உயர்த்தியுள்ள பேருந்து கட்டணத்தால் பலதரப்பட்ட மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மாணவர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், யு.எம்.டி. ராஜா பேருந்து பயணச் சீட்டுகளை கொண்டு கட்டண உயர்வால் மக்கள் அடைந்துள்ள வேதனையைக் குறிக்கும் வகையில் பயணச் சீட்டு தலை மேல் கை வைத்து அமர்ந்துள்ளது போல வடிவமைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 10 பயண சீட்டுகளைக் கொண்டு இதை உருவாக்க ஒரு நாள் தேவைப்பட்டது. மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக இதை உருவாக்கி உள்ளேன் என்றார்.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...