கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேசிய வாக்காளர் தினப் பேரணி

நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, வாக்களிப்பதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.


கோவை, ஜனவரி 25

கோவையில் தேசிய வாக்காளர் தினப் பேரணியை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தொடங்கி வைத்தார். 

நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினப் பேரணியை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தொடங்கி வைத்தார். இதில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, வாக்களிப்பதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியானது, பந்தயச் சாலை வழியாக தாமஸ் பூங்காவில் நிறைவடைந்தது.



இதைத் தொடர்ந்து, அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டு, புதிய வாக்காளர்களுக்கு வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் அவர் வழங்கிக் கவுரவித்தார். 

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...