பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவிநாசியில் கடை அடைப்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருப்பூர், ஜனவரி 25

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு சமீபத்தில் பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது. இதனால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை உயர்வும், ஜிஎஸ்டி போன்ற வரி அதிகரிப்பும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை வாட்டிவரும் நிலையில் தமிழக அரசின் இந்த செயல் அனைத்துத் தரப்பினரிடையேயும் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

தொடர்ந்து, தமிழக அரசின் இந்த மக்கள் விரோதத் திட்டத்தை எதிர்த்து மாணவர்களும், கட்சி அமைப்பினரும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, இன்று காலை முதலே அவிநாசி நகர் பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் டீக்கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன.

மேலும், முழு அடைப்பு போராட்டம் காரணமாக அப்பகுதி முழுவதுமே சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்த அளவிலேயே உள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...