பத்மாவத் படத்திற்கு தடைகோரி ராஷ்ட்ரீய ராஜ்புட் கர்ணி சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பத்மாவத் திரைப்படத்தை தடைசெய்யக்கோரி ராஷ்ட்ரீய ராஜ்புட் கர்ணி சேனா அமைப்பினர் சார்பாக கோவை காந்திபார்க் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, ஜனவரி 25

பத்மாவத் திரைப்படத்தை தடைசெய்யக்கோரி ராஷ்ட்ரீய ராஜ்புட் கர்ணி சேனா அமைப்பினர் சார்பாக கோவை காந்திபார்க் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள பத்மாவத் படம் வெளியாவதற்கான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு படத்தின் பெயர் மாற்றப்பட்டு, சில காட்சிகள் நீக்கப்பட்டு பத்மாவத் என்ற தலைப்பில்  நேற்று இந்தியா முழுவதும் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.



இந்த படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக ராஜபுத்திர அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இயக்குநர் பன்சாலியை சிரச்சேதம் செய்வோம், நடிகை தீபிகா படுகோனின் மூக்கை அறுப்போம் என கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் மிரட்டல் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில், இத்திரைப்படத்தை திரையிட தடை செய்யக்கோரி 50-க்கும் மேற்பட்ட ராஷ்டிரிய ராஜ்புட் கர்ணி சேனா அமைப்பை சார்ந்தவர்கள் இன்று கோவை காந்தி பார்க் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...