சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த இளைஞர் கோவையில் கைது

சிங்கப்பூரில் இருந்து நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்த இளைஞரை கோவை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை, ஜனவரி 25

சிங்கப்பூரில் இருந்து நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்த இளைஞரை கோவை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த இஜாஸ்கான் (24) என்ற இளைஞர் கொண்டு வந்த வாட்டர் கூலர் கம்பரசரில் தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.



வழக்கத்திற்கு மாறாக அதிக எடை கொண்ட அந்த கம்பரசரை அதிகாரிகள் வெட்டிப் பார்த்த போது தங்கத்தை சிறு, சிறு கட்டிகளாக வெட்டி தங்கத்தை மோட்டாரின் சிறுதுளை மூலம் அடைத்து வைத்து கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரூ. 90.52 லட்சம் மதிப்பிலான 2,920 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

விசாரணையில், கோவை விமான நிலையத்திற்கு வெளியே காத்திருக்கும் வேறு ஒரு நபரிடம் ஒப்படைக்க இருந்ததாக இஜாஸ்கான் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, அவரைக் கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், தங்கத்தைப் பெற காத்திருந்த நபர் யார் என்பதும் குறித்தும், எதற்காக கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...