தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 31-ம் தேதி இலவச பயிற்சி

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான இலவச பயிற்சி வரும் 31-ம் தேதி நடக்கிறது.

கோவை, ஜனவரி 25

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான இலவச பயிற்சி வரும் 31-ம் தேதி நடக்கிறது. 

இரண்டாம்நிலை காவலர், இரண்டாம்நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 6,140  காலிப் பணியிடங்களுக்கான தேர்வு வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. வயது வரம்பு 01.07.2017 அன்று 18 வயது முதல் 24 வயதுக்குள் வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்தவர்கள் 18 முதல் 26 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 18 வயது முதல் 29 வயதிற்கு மேற்படாதவர்களாகவும், முன்னாள் ராணுவத்தினர், மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், ஆதரவற்ற விதவைகள் எந்த வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்தத் தேர்விற்கு கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த எழுத்துத் தேர்விற்கு தபால் நிலையங்களில் விண்ணப்பங்கள் டிச., 28-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வரும் 27-ம் தேதி பிற்பகல் 12 மணிக்குள் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம், சென்னை-8 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் செய்தவர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக வரும் 31-ம் தேதி முதல் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இலவச பயிற்சி வகுப்பில் சேர தேர்விற்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...