திருப்பூரில் 15 வது புத்தக திருவிழா தொடங்கியது

திருப்பூரில் 15 வது புத்தக திருவிழாவை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி துவக்கிவைத்தார். 60 திற்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்துகொண்ட இத்திருவிழாவில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் ஜனவரி 25

திருப்பூரில் 15 வது புத்தக திருவிழாவை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி துவக்கிவைத்தார். 60 திற்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்துகொண்ட  இத்திருவிழாவில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூரில் ஆண்டு தோறும் பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 15 வது திருப்பூர் புத்தக திருவிழாவின் துவக்க விழா நடைபெற்றது.    

திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள பத்மினி கார்டனில் நடைபெற்ற துவக்க விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். 

பின்னர் புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார். பிப்ரவர் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த புத்தக திருவிழாவில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திருவிழாவில் பாரதி புத்தகாலயம், காலச்சுவடு பதிப்பகம், விஜயா பதிப்பகம், விகடன், சைவ சித்தாந்த பதிப்பகம் உள்ளிட்ட 60 திற்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்துகொண்டு தங்களது பதிப்பகங்களை காட்சிக்கு வைத்திருந்தனர். 

மேலும் கடந்தாண்டு சுமார் 60 ஆயிரம் பேர் பார்வையிட்டுதோடு ரூபாய் 1 கோடியே 25 லட்சம் புத்தகங்கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த்தாண்டு 1 லட்சம் பாரையாளர்கள் வரக்கூடும் எனவும், ரூபாய் 1 கோடியே 50 லட்சம் வரை புத்தங்கள் விற்பனை ஆகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக நிகழ்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

இந்நிகழ்சியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ்,தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட ஏராளமான  பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...