கோவை மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

தேசத்தின் 69வது குடியரசு தினவிழா, கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாநகராட்சி ஆணையாளரும், தனி அலுவலருமான டாக்டர் திரு. K.விஜயகார்த்திகேயன் மற்றும் துணை ஆணையாளர் திருமதி. காந்திமதி ஆகியோர் பங்கேற்றினர்.

கோவை, ஜனவரி 26

தேசத்தின் 69வது குடியரசு தினவிழா, கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாநகராட்சி ஆணையாளரும், தனி அலுவலருமான டாக்டர் திரு. K.விஜயகார்த்திகேயன் மற்றும் துணை ஆணையாளர் திருமதி. காந்திமதி ஆகியோர் பங்கேற்றினர்.

முன்னதாக மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு, மாநகராட்சி ஆணையாளரும், துணை ஆணையாளரும் மாலை அணிவித்தனர். பின்னர், தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர், பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர், மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக, மத்திய அரசின் ஸ்வச் சர்வேஷன், துய்மை நகரம் தரவரிசை கணக்கெடுப்பு வாகனத்தை, மாநகராட்சி ஆணையாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இவ்விழாவில், மாநகராட்சி அலுவலர்களும், துப்புரவு பணியாளர்களும், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...