குடியரசு தினத்தில் காந்தி சிலைக்கு மனு கொடுத்து போராட்டம்

உடுமலையில் குடியரசு தினமான இன்று காந்தி சிலைக்கு மனு கொடுத்து தமிழர் பண்பாட்டு பேரவையினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர், ஜனவரி 26

உடுமலையில் குடியரசு தினமான இன்று காந்தி சிலைக்கு மனு கொடுத்து தமிழர் பண்பாட்டு பேரவையினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



உடுமலை ரயில் நிலையத்தில் மதுரை- திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் நின்றுசெல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக தமிழர் பண்பாட்டுப் பேரவையினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுதொடர்பாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியமாகக் கருதி செயல்பட்டு வரும் மத்திய ரயில்வே துறையையும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கண்டித்து இன்று தமிழர் பண்பாட்டு பேரவையினர், உடுமலை காவல்நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மனு கொடுத்து, காந்தியிடம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கண்டன கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...