350 குழந்தைகள் பங்கேற்ற 'கலர் சேம்ப் 2018' ஓவியப்போட்டி

கோவையில் 350 குழந்தைகள் பங்கேற்ற 'கலர் சேம்ப் 2018' ஓவியப்போட்டி இன்று நடைபெற்றது.


கோவை, ஜனவரி 26

கோவையில் 350 குழந்தைகள் பங்கேற்ற 'கலர் சேம்ப் 2018' ஓவியப்போட்டி இன்று நடைபெற்றது.



எஸ்.ஐ.பி. அகாடமி மற்றும் குளோபல்ஆர்ட் நிறுவனங்கள் இணைந்து ஆண்டுதோறும் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டிகளை நடத்தி வருகின்றன. அதன்படி, இன்று காலை வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் 5-வது பிராந்திய ஓவியப்போட்டி நடைபெற்றது.



'கலர் சேம்ப் 2018' என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஓவியப்போட்டியில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.



இந்நிகழ்ச்சியை விவித் சர்வதேச பள்ளியின் நிறுவனரான கவிதா நந்தகுமார் மற்றும் குளோபல்ஆர்ட் இந்தியா அமைப்பின் வர்த்தக தலைவர் நம்ரதா முகர்ஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

நிகழ்ச்சியில், கவிதா நந்தகுமார் பேசுகையில், 'இந்த ஓவியப்போட்டியில் சிறு கிராமங்களில் இருந்தும் அதிகப்படியான எண்ணிக்கையில் குழந்தைகள் பங்கேற்பது வரவேற்கத்தக்கது. இது ஒரு சாதாரண ஓவியப்போட்டியல்ல. குழந்தைகளின் தனித்துவம் மிக்க எண்ணங்களைப் பறைசாற்ற உதவும் ஒரு நிகழ்வு. இத்தகைய போட்டிகள் வருங்காலத்தில் அவர்களைத் தன்னம்பிக்கையுடனும், சுதந்திரத்துடனும் வாழ்வதற்குப் பழகச்செய்யும்' என்றார்.



தொடர்ந்து, குளோபல்ஆர்ட் இந்தியா-வின் வர்த்தக தலைவர் நம்ரதா முகர்ஜி பேசுகையில், 'படைப்பாற்றல்களை வெளிப்படுத்த சரியான அடித்தளம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டால், அவர்கள் வாழ்வின் அனைத்து சவால்களையும் தாண்டி வெற்றி பெரும் சூழல் உருவாகும். இதில் எங்கள் பங்களிப்பு திருப்திகரமாக உள்ளது' என்று பேசினார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...