கிராமசபை கூட்டத்திற்கு வருவதில் அதிகாரிகள் தாமதம் : பொழுதைப் போக்க ஐந்து கல் ஆட்டம் ஆடிய பொதுமக்கள்

கோவையில் கிராம சபைக் கூட்டத்திற்கு வர அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்ததால், பொதுமக்கள் ஐந்து கல் ஆட்டம் ஆடி பொழுதைக் கழித்தனர்.

கோவை, ஜனவரி 26

கோவையில் கிராம சபைக் கூட்டத்திற்கு வர அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்ததால், பொதுமக்கள் ஐந்து கல் ஆட்டம் ஆடி பொழுதைக் கழித்தனர். 



பெரிய நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி அசோகபுரம் ஊராட்சி. இங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, காலை 11 மணி முதல் அக்கிராமத்தில் உள்ள சாக்கடை, குப்பை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் குறித்து மனு அளிக்கக் கிராம மக்கள் கூடியிருந்தனர். 



ஆனால், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பல மணி நேரமாகியும் கூட்டத்திற்கு வராததால், அதிகாரிகளுக்காகக் காத்திருந்த கிராம மக்கள் சிலர் பொழுதைப் போக்க ஐந்து கல் ஆட்டம் ஆடினர். தொடர்ந்து, அதிகாரிகள் வர தாமதம் ஏற்பட்டதால் கிராம மக்கள் கூட்டத்தை புறக்கணித்து அங்கிருந்து சென்றனர். அதிகாரிகளின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...