புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் உள்ள 3 புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 26

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் உள்ள 3 புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது : கோவை மாவட்ட புள்ளியியல் துணை இயக்கநர் அலுவலகத்தில் புதியதாக 3 தற்காலிக புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பதவி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடந்த ஆண்டு ஜுலை 1-ம் தேதி அன்று 35 வயதிற்கு மிகாமலும், ஏதாவது ஒரு பட்டம் மற்றும் கணிப்பொறியியல் சான்று பெற்றிருப்பவரும் அரசு நியமனத்தில் பின்பற்றப்படும் இனசுழற்சி முறையைப் பின்பற்றி பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் இருந்து வழங்கப்படும் கேள்வித்தாள் வைத்து தேர்வு நடத்தி நேர்காணல் வைத்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் தொகுப்பு ஊதியமாக ரூ.15,000 மட்டும் வழங்கப்படும். இதரபடிகள் ஏதும் வழங்கப்படமாட்டாது.  

மேற்கண்ட தகுதிகளை உடைய தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து வரும் பிப்., 10-ம் தேதி மாலை 05. 45 மணி வரை புள்ளியியல் துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர், அலுவலக வளாகம், பழைய கட்டிடம், முதல்தளம், கோவை 641018, தொலைப்பேசி எண் 0422 - 2309685 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பிவைக்க வேண்டப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...