கோவையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திமுக உள்ளிட்ட 8 கட்சிகள் சார்பில் கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


கோவை, ஜனவரி 27

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திமுக உள்ளிட்ட 8 கட்சிகள் சார்பில் கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர். இராமசந்திரன், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மணி ஆகியோர் தலைமை தாங்கினார். 



இதில், தி.மு.க. சொத்துபாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பைந்தமிழ்பாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுந்தரம், ஆறுமுகம், காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார், வி.எம்.சி. மனோகரன், எம்.என். கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுசி கலையரசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கார்த்திகேயன், ம.தி.மு.க.வை சேர்ந்த ஆர்.ஆர். மோகன்குமார் உள்ளிட்ட 8 கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அனுமதியளித்தையடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...