கோவையில் முதல்முறையாக நாளை ஜல்லிக்கட்டு போட்டி : பாதுகாப்பு பணிக்காக 500 போலீசார் குவிப்பு

கோவையில் நாளை நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


கோவை, ஜனவரி 27

கோவையில் முதல்முறையாக நாளை நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஓம்கார் அமைப்பு சார்பில் கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. செட்டிபாளையம் பகுதியில் நாளை நடைபெற இருக்கும் இந்தப் போட்டிக்கான வாடிவாசல் அமைக்கும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த வாரம் தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பொதுமக்கள் அதிக அளவில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால், ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மாநகர போக்குவரத்து போலீசார், ஆயுதப்படை போலீசார் என 500 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...