முதல்முறையாக நீலகிரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனிப்பேருந்து வசதி

நீலகிரியில் அதிகரட்டி அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வியுடன், தனியார் பள்ளிகளைப் போல சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்திருப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

நீலகிரி, ஜனவரி 27

நீலகிரியில் அதிகரட்டி அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வியுடன், தனியார் பள்ளிகளைப் போல சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்திருப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 



தற்போது, ஆங்கிலவழி கல்வி மோகத்தில் அரசு பள்ளிகளை பெற்றோர் தவிர்ப்பதால் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைய தொடங்கி, காலப்போக்கில் பள்ளிகள் மூடுவிழா கண்டு வருவது வேதனை அளிக்கிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் அதிகரட்டி கிராமத்தில் கடந்த 1852-ம் ஆண்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவக்கப்பட்டது. மிகவும் பழமையும், பாரம்பரியமும் மிக்க இந்த ஆரம்ப பள்ளியில் கடந்த ஆண்டு 12 மாணவர்களாகக் குறைந்து காணப்பட்டது. 

இதனையடுத்து, இந்தப் பள்ளி மூடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், அந்தப் பள்ளியில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகம் உறுதுணையாக செயல்பட்டு அரசு பள்ளியில் ஆங்கிலவழி கல்வியை கொண்டு வந்து, அதற்காக ஆசிரியைகளை நியமித்து ஊதியமும் வழங்க முன் வந்துள்ளது. மேலும், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் சுற்றுவட்டார கிராமங்களான மணியட்டி, முட்டிநாடு, நுந்தளா, காத்தாடி மட்டம் போன்ற பகுதிகளில் இருந்து மாணவர்களை அழைத்து வர ரூ. 17 லட்சம் செலவில் பள்ளி பேருந்து ஒன்றை வாங்கி இலவசமாக இயக்கி வருகிறது.

இந்நிலையில், இந்தப் பள்ளியில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 135 மாணவர்களாக உயர்ந்துள்ளதால் அதிகரட்டி கிராம மக்கள் தங்கள் பள்ளியை தக்கவைத்துள்ளனர். ஆங்கில மோகத்தால் அரசு பள்ளிகளை அந்தந்த கிராமமக்கள் ஊக்குவித்தாலே சிறப்பாக இருக்கும் என்பதற்கு அதிகரட்டி பள்ளியே சான்றாக உள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...