மூடப்படும் சூழலில் உதகை இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை- வாழ்வாதாரத்தை இழக்கும் தொழிலாளர்கள்

உதகையில் 320 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை நலிவடைந்து மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



நீலகிரி, ஜனவரி 28

உதகையில் அமைந்துள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை நலிவடைந்து மூடப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது..

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாளாக தேயிலை விவசாயம் திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மலைத் தோட்ட காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இத்தொழில்களைத் தவிர அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்து வந்தது இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை.



உதகையில் கடந்த 1967-ம் ஆண்டு மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியால் 320 ஏக்கர் பரப்பளவில் தொடங்கி வைக்கப்பட்ட பொது துறை நிறுவனமான இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலையில் போட்டோ பிலிம், பேப்பர், எக்ஸ்ரே, சினிமா பிலிம் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இலாபகரமாக இயங்கி வந்த இத்தொழிற்சாலை கடந்த 1991-ம் ஆண்டு முதல் பொருளாதார கொள்கை, உலக வர்த்தகமயமாதல் மற்றும் பல காரணங்களால் நலிவடையத் துவங்கியது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்றி வந்த நிலையில் தற்போது 150-க்கும் குறைவானவர்களே உள்ளனர். இதுமட்டுமின்றி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் பெரும் சிரமங்கள் நிலவிவருவதாக வேதனைத் தெரிவிக்கின்றனர் அங்கு பணியாற்றுவோர்.

தொடர்ந்து, உற்பத்தியும் முடங்கி வரும் நிலையில் தற்போது பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி பெரும்பாலானோர் விரும்ப ஓய்வில் சென்றுவிட்டனர். தற்போது உள்ளவர்களும் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நலிவடைந்த தொழிற்சாலை என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் இதனை மறுசீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர் அங்கு பணியாற்றுவோர்.



இருப்பினும் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளாததால் மனமுடைந்த தொழிலாளர்கள் தங்களது அன்றாட பிழைப்பிற்காக சமவெளி பிரதேசங்களுக்கு வேலை தேடி செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. உதகையைச் சேர்ந்த பல ஆயிரம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிவந்த தொழிற்சாலை முடங்கிக்கிடப்பது அடுத்த தலைமுறையினரின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில் ஒரு பன்னோக்கு மருத்துவமனையோ அல்லது வேறு தொழிற்சாலையை அமைத்து மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...