உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழ் ஆண் சடலம் மீட்பு

உப்பிலிபாளையம் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை, ஜனவரி 28

உப்பிலிபாளையம் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்று காலை (ஜன. 28) உப்பிலிப்பாளையம் மேம்பாலத்திற்குக் கீழ் பகுதியில் முதியவரின் சடலம் ஒன்று இருப்பதாக ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை உறுப்பினர்கள் காட்டூர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல் துறையினர் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, அறக்கட்டளை நிர்வாகிகள் உயிரிழந்தவரின் யார் என்றும், அவர் எப்படி அங்கு வந்தார் என்றும் தகவல் திரட்டும் முயற்சியை மேற்கொண்டு அவரது பெயர் சுப்பிரமணி என்றும் அவர் பொள்ளாச்சியை சேர்ந்தவர் என்றும் கண்டறிந்தது.

இதனைத்தொடர்ந்து, ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் வசிக்கும் அவரது மகன் சக்திவேல் என்பவருக்குத் தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டார். 

அதன் பிறகு காட்டூர் காவல் துறையினர் விசாரணைக்குப் பிறகு பிரேதத்தை சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...