நம்ம கோவை ஜல்லிக்கட்டு 2018: சிறந்த மாடுபிடி வீரருக்கு மாருதி கார் பரிசு

கோவையில் நடைபெற்ற 'நம்ம கோவை ஜல்லிக்கட்டு 2018' போட்டியில் சிறப்பாக மாடுபிடித்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது.

கோவை, ஜனவரி 28

கோவையில் நடைபெற்ற 'நம்ம கோவை ஜல்லிக்கட்டு 2018' போட்டியில் சிறப்பாக மாடுபிடித்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது.

கோவை செட்டிபாளையம் பகுதியில் கோவை மாவட்ட நிர்வாகமும், தனியார் அமைப்பும் இணைந்து இன்று ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்தியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவங்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டு துவக்க நிகழ்ச்சியில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இப்போட்டியில், சரவணம்பட்டி கரிவரதராஜ கோவில் காளை முதலில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, போட்டிக்காகத் தென்மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியில் விடப்பட்டன. இதனை 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் எதிர்த்து நின்று அடக்கியது அங்கு கூடியிருந்தோரை வெகுவாகக் கவர்ந்தது.

இப்போட்டியின் இறுதியில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த மாட்டின் உரிமையாளர்களுக்க பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், சிறந்த மாடுபிடி வீரராக முதல் பரிசை மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தட்டிச் சென்றார். அவருக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரண்டாம் இடம் பிடித்த மட்டப்பாறையைச் சேர்ந்த கோடி-க்கு ஹீரோ இருசக்கர வாகனமும், மூன்றாம் இடம் பிடித்த காட்டூர் கார்த்திக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனமும் பரிசாக வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, சிறந்த மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் டி.ராஜசேகரின் மாடு சிறந்த மாடாகத் தேர்வு செய்யப்பட்டு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, திருச்சியைச் சேர்ந்த சிவா மற்றும் முத்துராமன் ஆகியோரின் மாடுகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப்பிடித்து ஹீரோ இருசக்கர வாகனம், டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் தங்க காசு, கட்டில், பீரோ மற்றும் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...