உதகையில் 16-வது ரோஜா கண்காட்சிக்கான செடிகளை கவாத்து செய்யும் பணி தொடக்கம்

உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் நடக்க இருக்கும் 16-வது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரம் செடிகளை கவாத்து செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார்.

நீலகிரி, ஜனவரி 29

உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் நடக்க இருக்கும் 16-வது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரம் செடிகளை கவாத்து செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார்.

 இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இந்த சீசனின் போது வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிவர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க உதகை மலர் கண்காட்சியின் 100-வது ஆண்டு நினைவாக துவக்கப்பட்ட ரோஜா பூங்காவில் மலர் கண்காட்சி தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்படும். 

 இந்நிலையில், இந்தாண்டு கோடை சீசனுக்காக தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காவிலும் மலர் நாற்றுகள் நடவு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. நூற்றாண்டு உதகை ரோஜா பூங்காவில் கோடை சீசனுக்காக ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். இந்த ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரோஜா ரகங்களில் சுமார் 30 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 

16வது ரோஜா கண்காட்சி இந்த ஆண்டு மே மாதத்தில் துவங்க உள்ளதால் ஏப்ரல் மாதம் முதல் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குவதற்கு 30 ஆயிரம் ரோஜா செடிகள் கவாத்து செய்யும் பணிகள் இன்று துவங்கியது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...