ராட்சத மரம் விழுந்ததால் உதகை மலை ரயில் சேவை பாதிப்பு

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள லவ்டேல் பகுதியில் ராட்சத மரம் விழுந்ததால் மலை ரயில் சேவை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, ஜனவரி 29

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள லவ்டேல் பகுதியில் ராட்சத மரம் விழுந்ததால் மலை ரயில் சேவை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 



உதகை அருகே லவ்டேல் சந்திப்பில் இன்று அதிகாலை 5 மணியளவில் ராட்சத மரம் ஒன்று விழுந்தது. இந்த மரமானது உதகை மற்றும் குந்தா செல்லும் பிரதான சாலையிலும் மலை ரயில் பாதையிலும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ராட்சத கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரம் மூலம் சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மரம் அகற்றப்பட்டது. இதனால், உதகை மற்றும் குந்தா முக்கிய சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், மலை ரயில் பாதையில் மரம் விழுந்ததால் மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...