மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் எதிர்ப்பு விழிப்புணர்வு கலைப் பயணம் இன்று துவக்கம்

தமிழ்நாடு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் கோவை மாவட்டத்தில் மதுபானம், கள்ளச்சாராயம் எதிர்ப்பு விழிப்புணர்வு கலைப் பயணம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கியது.

கோவை, ஜனவரி 29

தமிழ்நாடு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் கோவை மாவட்டத்தில் மதுபானம், கள்ளச்சாராயம் எதிர்ப்பு விழிப்புணர்வு கலைப் பயணம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கியது.



இந்த கலைப் பயணத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கங்கை கருங்குயில்கள் கலைக் குழுவினர் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளனர். 60 பேர் கொண்ட இந்தக் குழுவினர் மூன்று அணிகளாகப் பிரிந்து இருகூர், சிங்காநல்லூர், பட்டணம், காமநாயக்கன்பாளையம், சூலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.



30 நாட்கள் நடைபெறும் இதில் பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.



இன்று நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கொடியசைத்து பிரச்சாரத்தைத் துவக்கி வைத்தார். மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை துணை ஆணையர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...