சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் : பிரதமர் மோடி

சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 29

சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கானதாக இருக்கும் என நம்புகிறேன். இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரின் விருப்பங்களையும், தேவைகளையும் பூர்த்தி செய்வதாக இருக்கும். அதிலும், சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக இருக்கும். 

பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியமானது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட்டு, அவர்கள் வழங்கிய பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு மிக கவனமாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது உலகம் நம்பிக்கை கொண்டுள்ளது. உலக வங்கி, ஐஎம்எப் போன்ற அமைப்புக்களும் இந்தியாவின் கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளன. 

கிராமப்புற இந்தியா, விவசாயிகள், தலித்துகள், பழங்குடியின மக்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனை மனதில் கொண்டு பட்ஜெட் இடம்பெறும் சிறப்பு அம்சங்கள் குறித்து நாடாளுமன்ற குழுக்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...