பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுற்றுலா மற்றும் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்ட சுற்றுலா மற்றும் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

கோவை, ஜனவரி 29

கோவை மாவட்ட சுற்றுலா மற்றும் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.



அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- மத்திய, மாநில அரசுகளால் சுமத்தப்படும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற சட்டங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதிகாரிகளும் தங்கள் மீது உள்நோக்கத்துடன் இடையூறு செய்து வருகின்றனர். 

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை காரணமாக தொழில் செய்ய முடியாமல் குடும்பங்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை, வாரத்திற்கு 48 மணி நேரம் பணி என்ற சட்டத்திருத்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். வாகன சோதனையின் போது அசல் ஓட்டுநர் உரிமத்தைப் பறித்து வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். சுற்றுலா வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகள் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக முதலமைச்சர், அரசு போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் மற்றும் போக்குவரத்து ஆணையருக்கு அனுப்ப உள்ளதாகவும் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...