தாய்மாமனைக் கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

தாய்மாமனைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, ஜனவரி 29

தாய்மாமனைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது தாய்மாமன் நடராஜன் வீட்டில் வசித்து வந்துள்ளார். வேலைக்கு ஏதும் செல்லாமல் வெட்டியாக சுற்றித் திரிந்த சிவகுமார் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.

இவரது தாய்மாமனான நடராஜன், கூலி வேலைக்குச் செல்பவர். அவ்வப்போது சிவக்குமாருக்கு செலவு செய்ய பணம் கொடுத்து வந்த நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு மது அருந்த பணம் தராததால் தாய்மாமனான நடராஜனை அம்மிக் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று தீர்ப்பு வழங்கிய கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி விஜயா, சிவகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...