தமிழக அரசு முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை- முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் பேட்டி

தமிழக அரசு முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை எனவும், போக்குவரத்துத் துறையும் கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டு வருகிறது என முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.

நீலகிரி, ஜனவரி 29

தமிழக அரசு முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை எனவும், போக்குவரத்துத் துறையும் கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டு வருகிறது என முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், உதகையில் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாளையோ அல்லது அடுத்த மாதமோ எப்பொழுது வேண்டுமானாலும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆட்சி அமைக்கப் போவது உறுதி. ஒவ்வொரு அமைச்சரும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் தமிழகத்திற்கு திட்டங்கள் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால், நீட் தேர்வில் நமது உரிமையை விட்டுக் கொடுத்து விட்டோம்.

கதிராமங்கலம், நெடுவாசல் போன்ற பிரச்சனைகளில் தங்களது உரிமைகளை விட்டுக்கொடுத்து விட்டோம். காவிரி பிரச்சனையில் நமது உரிமையைப் பெற முடியாத சூழ்நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் அதிமுக அமைச்சர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகும்.

போக்குவரத்து பேருந்துகளின் அவல நிலை தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது. ஒரு இயக்கம் என்பது புதிய பேருந்துகளை வாங்கி இயக்குவது அல்லது பழைய பேருந்துகளைப் பராமரிப்பதாக உள்ளது. தமிழக அரசு முதலமைச்சர் கப்டுப்பாட்டில் இல்லை. அதேப் போல தான் போக்குவரத்துக் கழகமும் கட்டுப்பாட்டினை இழந்து செயல்பட்டு வருகிறது. 

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்வரும் 31-ம் தேதியன்று கூடலூரில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...