”பறவைகளை கண்டு ரசிப்பது உடல்நலத்தை ஆரோக்கியமாக்கும்”

பறவைகளை கண்டு ரசிக்கும் இளைஞர்களின் உடல்நலம் நல்ல ஆரோக்கித்துடன் வாழ வகை செய்யும் என அமெரிக்க பறவைகள் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

கோவை : பறவைகளை கண்டு ரசிக்கும் இளைஞர்களின் உடல்நலம் நல்ல ஆரோக்கித்துடன் வாழ வகை செய்யும் என அமெரிக்க பறவைகள் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 



கோவையில் எச்.எஸ்.பி.சி.யின் 7-வது பறவைகளுக்கான பந்தயம் நடைபெற்றது. இதில், அமெரிக்காவின் தேசிய பறவைகள் சங்கத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பெர்ன்ஸ்டீன் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, கோவை மற்றும் வெளிநாடுகளில் பறவைகள் பார்வையாளர்கள் குறித்து ரிச்சர்ட் பேசுகையில், அமெரிக்காவில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முதியவர்களை மட்டுமே காண முடிகிறது. ஆனால், கோவையில், அதிகப்படியான போட்டியாளர்கள் இளைஞர்கள். இது அவர்களை ஆரோக்கியமாக வைக்க உதவும். என்றார். 



மேலும், அமெரிக்காவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்துமஸ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாக அவர் கூறினார். 

இதேபோல, இந்திய பறவைகள் பந்தயம் சங்கத்தைச் சேர்ந்த சஞ்சய் மோங்கா கூறுகையில், கடந்த 15 நகரங்களில் நடைபெற்ற இதுபோன்ற நிகழ்ச்சிகளில் சுமார் 3,000 -க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், பறவைகள் பார்வையாளர்கள் முக்கிய அம்சமாக உள்ளனர். இவ்வாறு கூறினார். 

சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்தின் அறிவியலாளர் பி. பிரமோத் கூறுகையில், கடந்த 6 பறவைகளுக்கான போட்டியின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம்  புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. என்றார். 

கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 25 அணிகள் கலந்துகொண்டன. ஐரோப்பிய பீ ஈட்டர், டெமினிக் ஸ்டிண்ட் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தன. 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...