கோவைக்கு தமிழ்நாடு மறுவரையறை ஆணைய அதிகாரிகள் வருவது குறித்த ஆய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சிக்குட்ட வார்டுகள் மறுவரையறைப் பட்டியல் குறித்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை : கோவை மாநகராட்சிக்குட்ட வார்டுகள் மறுவரையறைப் பட்டியல் குறித்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊரக வளர்ச்சிக் கூட்டரங்கில், ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.  இதில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் ப. காந்திமதி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முருகன், மாநகர நகரமைப்பு அலுவலகர் ரவிச்சந்திரன், மாமன்ற செயலர் ஆ. அமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

இந்தக் கூட்டத்தில், கோவை மாநகராட்சியின் வார்டுகள் மறுவரையறை பட்டியல் குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்த ஆய்வு செய்ய பிப்ரவரி 1-ம் தேதி தமிழ்நாடு மறுவரையறை ஆணைய அதிகாரிகள் கோவை வருகின்றனர். இதையொட்டி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...