அமைச்சர்களின் இலாபத்திற்காகவே பேருந்து கட்டணம் உயர்வு : ஆதாரம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் பேட்டி

ஆயிரம் பேருந்து வழித்தடங்களை முக்கிய அமைச்சர்கள் வாங்கிய பிறகே பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளதாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை : ஆயிரம் பேருந்து வழித்தடங்களை முக்கிய அமைச்சர்கள் வாங்கிய பிறகே பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளதாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். 

கோவை வடவள்ளி அருகே டிடிவி தினகரனின் கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், பேருந்து கட்டண குறைப்பு கண் துடைப்பு மட்டுமே. போக்குவரத்து துறை பொதுமக்களுக்கு சேவையாற்றக்கூடிய துறையே தவிர வருமானம் அடிப்படையில் இதைப் பார்க்கக்கூடாது. ஜெயலலிதா அரசாக இருந்திருந்தால் பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற்று இருப்பார்கள். போக்குவரத்தில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை அரசுதான் வழங்க வேண்டும். 

 

சேலத்திலிருந்து கோவைக்கு சுமார் 1,000 பேருந்து வழித்தடங்களை ஒருசில முக்கிய அமைச்சர்கள் வாங்கிய பிறகுதான் பேருந்து கட்டண உயர்வு என்பது உண்மைதான். இது குறித்து எங்களிடமே பல தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறியுள்ளனர். 

 

பிப்ரவரி இறுதிக்குள் "கூவத்தூர் பழனிச்சாமி" அரசு வீட்டுக்கு அனுப்பப்படும். அ.தி.மு.க.,விலிருந்து நிர்வாகிகளை நீக்குவது சட்டப்படி குற்றம். மத்திய அரசிடம் தற்போதைய தமிழக அரசு நிர்வாகத்தை அடமானம் வைத்துள்ளது. மத்திய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் பெற்ற அ.தி.மு.க., சின்னத்தையும், கட்சியையும் நீதிமன்றம் மூலம் மீண்டும் பெறுவோம். அ.தி.மு.க.,வின் நிரந்தர பொதுச்செயலாளர் சசிகலா தான், துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தான். என்றார். 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...