கர்நாடக முதலமைச்சரை சந்திக்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி திட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

தமிழ்நாடு: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். 

டெல்டா பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், போதியளவு தண்ணீர் இல்லை எனக்கூறி, தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்டது. இந்நிலையில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பிற்கு நேரம் ஒதுக்குமாறு கர்நாடக அரசின் தலைமை செயலர், முதன்மை செயலர் மூலம் தொலைபேசி மற்றும் கடிதம் வாயிலாக சித்தராமையாவுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. டெல்டா மாவட்ட அமைச்சர்களுடன், சித்தராமையாவை சந்திக்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...