இந்திய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர், வீராங்கனைகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், காஷ்யப் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஜனவரி 31




இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், காஷ்யப் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் இன்று தொடங்கி வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது. இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், டென்மார்க்கின் நடால்யா கோச் ரோடேவும் மோதினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சிந்து முதல் சுற்றை 21-10 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டையும் சிந்து 21-13 எனக் கைப்பற்றினார். இதன்மூலம், 21-10, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்தும், ஹாங்காங்கின் லீ சியூக் இயூவும் மோதினர். இப்போட்டியின், முதல் இரண்டு செட்களையும் 21-17, 21-18 என்ற நேர் செட்களில் ஸ்ரீகாந்த் கைப்பற்றினார். இதன் மூலம் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரரான காஷ்யப், டென்மார்க்கின் ஹான்ஸ்-கிரிஸ்டெய்ன் விட்டின்கசை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-14, 21-18 என்ற நேர் செட்களில் காஷ்யப் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 

இதுதவிர இந்திய வீராங்கனைகளாக சாய்னா நேவால், முக்தா அக்ரே, ஆகார்ஷி காஷ்யப், கட்டே ருத்விகா ஷிவானி மற்றும் இந்திய வீரர்களான சாய் பிரனீத், சித்தார்தா ஜெய்ஸ்வால் ஆகியோரும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....