வால்பாறையில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழா உற்சாகக் கொண்டாட்டம்

வால்பாறையில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 13-ம் ஆண்டு தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவை : வால்பாறையில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 13-ம் ஆண்டு தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 



கோவிலில் தைப்பூசத் திருவிழாவின் துவக்க நாளான கடந்த 27-ம் தேதியன்று திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, மாலை 07.00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. 29-ம் தேதி காலை 06.00 சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு பிரதோஷ வழிபாட்டைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு வால்பாறை வாழும் கலை குடும்பம் குழுவினரின் தெய்வீக இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று சிறப்பு அபிஷேகமும், ஆராதனையைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர்.

அதைத்தொடர்ந்து இன்று நல்லகாத்து ஆற்றிலிருந்து புறப்பட்ட வால்பாறை முருகன் பக்தர்களின் அங்க அலகு பறவைக்காவடி மாபெரும் ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆலயத்தை அடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பறவை காவடி பக்தர்களுடன் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. 

அதைத்தொடர்ந்து, பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகளுடன் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில், வால்பாறையின் பல்வேறு எஸ்டேட் பகுதிகள் மற்றும் வெளியூரிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தைப்பூச திருவிழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் தைப்பூச விழாக்குழுவினர் மற்றும் கோயில் கமிட்டிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...