”கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் சகோதர சண்டை இருக்கக் கூடாது”

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் சகோதர சண்டை இருக்கக் கூடாது என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை : கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் சகோதர சண்டை இருக்கக் கூடாது என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறுகையில், டெல்டா விவசாயத்தைப் பாதுகாக்க 7 முதல் 10 டி.எம்.சி. காவிரி தண்ணீர் அவசர தேவைக்காக கர்நாடகாவிடம் கேட்டுள்ளோம். மேலும், கர்நாடகாவிடம் காவிரி நீர் கேட்பது நமது உரிமை. காவிரி நடுவர்மன்ற தீர்ப்புபடி கொடுப்பது கர்நாடக அரசின் கடமை. தமிழக அரசின் சில திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்குவதில்லை. தமிழகத்திற்கு இந்த மத்திய பட்ஜெட்டில் முழுமையாக நிதி ஒதுக்குமென எதிர்பார்க்கிறோம். 

திராவிட இயக்கத்தை தவிர தமிழகத்தில் வேறுயாராலும் காலூன்ற முடியாது. இதன்மூலம், மத்திய அரசுடன் விரிசல் என அர்த்தமில்லை. தமிழகத்தைப் பொருத்தவரை திராவிட இயக்கப் பங்களிப்பு தமிழக மக்களின் வாழ்வில் ஒருங்கிணைந்து இருக்கிறது. தேசிய கட்சிகள் தங்களை நிலை நிறுத்தப் பணிகளை அரசியல் ரீதியாக செய்யவில்லை. 

தேனி நியுட்ரினோ ஆய்வக திட்டம் தொடர்பான மக்களின் அச்சத்தைப் போக்க மத்திய அரசு விளக்க வேண்டும். கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் சகோதர சண்டை இருக்க கூடாது. முதலமைச்சரும், தானும் டெல்லி செல்லும் ஒவ்வொரு முறையும் பிரதமரிடம் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். ஆயிரம் பேருந்து வழித்தடங்களை தமிழக அமைச்சர்கள் வாங்கியிருப்பதாக முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கூறியிருப்பது, ஆதாரமற்ற உண்மை. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...