நீலகிரியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே உள்ள கப்பட்டி கிராமத்தில் தனியார் விடுதிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே உள்ள கப்பட்டி கிராமத்தில் தனியார் விடுதிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.       



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கப்பட்டி கிராமத்தில் தனியார் விடுதிக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டுள்ளது. இதனை அந்த தனியார் விடுதி நிர்வாகம் மூடாமல் இருந்ததால் அப்பகுதியில் சுற்றி திரிந்த காட்டெருமை அந்த கிணற்றில் தவறி விழந்துள்ளது.



இதனையறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வன அதிகாரி கணேசன் தலைமையில் கிணற்றில் விழந்த காட்டெருமையை  காப்பற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் அந்த காட்டெருமை உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், இது போன்ற சம்பவங்கள் இப்பகுதியில் அதிகளவு நடைபெறுவதற்கு தனியார் விடுதிகள், அரசின் அனுமதி பெறாமல் இது போன்ற ஆழ்துளை கிணறுகள் வெட்டுதல், பாறைகள் உடைத்தல் போன்ற சட்ட விரேத செயல்களில் ஈடுபடுவதே காரணம் என்றும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...