கோவை ஏ.டி.எம் கொள்ளையில் வழக்கில் முக்கிய நபர் கைது: கொள்ளையன் குறித்து அதிரவைக்கும் தகவல்கள்

கோவையில் நடைபெற்ற ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் ஹரியானாவை சேர்ந்த நபரை கோவை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவையில் நடைபெற்ற ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் ஹரியானாவை சேர்ந்த நபரை கோவை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் ஏ.டி.எம் மையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி புகுந்த மர்ம நபர்கள் ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். 

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த தினங்களில் அருகில் இருக்கும் ஏ.டி.எம். மையங்களிலும் புகுந்து கைவரிசை காட்டிய அந்த கும்பல் மொத்தமாக ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது. 

இந்த கொள்ளையர்களை பிடிக்க மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் தலைமையில் 7 தனிப்படைகளை அமைத்து மாநகர காவல் ஆணையர் K.பெரியய்யா உத்தரவிட்டார். 

தனிப்படையினரின் விசாரணையின் போது கொள்ளையர்கள் நாமக்கல் மற்றும் சேலம் வழியாக பெங்களூர் தப்பிச்செல்ல இருப்பது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து அந்த மாவட்டங்களின் போலீசாருடன் இணைந்து செயல்பட்ட கோவை மாநகர போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட ஜீல்பிகர், முஸ்டாக், மோசம்கான், சுபேர், அமித்குமார், முபாரக், அமீன் மற்றும் சுபேர் ஆகியோரை கைது செய்தனர். 

இந்த கொள்ளை கும்ன்பலின் தலைவன், போலீசாரிடம் இருந்து தப்பித்து தலைமறைவாகினார். 

தொடர்ந்து, தப்பியோடிய கொள்ளையனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது ஹரியான மாநிலத்தை சேர்ந்த சித்திக் அகம்மது என்பவரது மகன் இசுலாமுதீன் (42) என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதிக்கு இசுலாமுதீன் அவரது காதலியை சந்திக்க வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில், நேற்று இரவு ராஜஸ்தான் மாநில போலீசாரின் உதவியுடன் இசுலாமுதீனை கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்படிருப்பதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. 

இந்த கொள்ளை கும்பல் மீது டெல்லி, ஹரியான, உத்திரபிரதேசம், குஜராத், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளையடித்தல் போன்ற 34-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

கொள்ளை வழக்கு ஒன்றிற்காக ஹரியானா மாநில மேவாத் மாவட்ட போலீசாரால் தனது கும்பலுடன் கடந்த கடந்த 2016-ம் இசுலாமுதீன் கைது செய்யப்படுள்ளார்.

தற்போது கோவை மாநகர போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...